Hari Krishnamurthy's blog

Thursday 24 December 2015

‘திருவாதிரைதிருநாள்’







பக்தனின் பாடலால் நகர்ந்த தேர்

மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின்ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும்இத்தகையசிறப்பு மிக்க திருவாதிரை திருநாளில் 'களிஎன்னும் உணவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
'
திருவாதிரையில் ஒரு வாய்க்களிஎன்பது சொல் வழக்குதிருவாதிரை தினத்தன்றுதில்லை நடராஜரை நினைத்துவிரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம்உண்டு என்பதை மறுப்பதற்கில்லைஅத்தகைய சிறப்பான இடத்தை 'களிபிடித்ததற்கான கதையை காணலாம்.
சிவதொண்டர்
சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார்இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்துவந்தார்சேந்தனாரும்அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர்தினமும் உணவு உட்கொள்ளும்முன்பாக சிவதொண்டர் களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள்தானத்தில் சிறந்ததுஅன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும்தவிர இயல்பாகவேஅந்த தம்பதியரிடம் ஈகை குணம்இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார்இதனால் அவரதுசொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார்ஆனால் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை.காலம் கழிக்க வேண்டுமே என்ன செய்வது?. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்பவருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர் சேந்தனார் தம்பதியர்.
களி சமைத்தனர்
அந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர் களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாகஅவர்கள் திகழ்ந்தனர்ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக சேந்தனார்விற்பனைக்காக கொண்டு சென்றவிறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லைவிறகுகளை விற்றால்தானே காய்கறி வாங்கி வீட்டில் சமையல் செய்யஇயலும்சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியும் என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார்.
ஆனால் அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார்பின்னர்தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களாஎன்று காத்திருக்க தொடங்கினர்சேந்தனாருக்குமனது ஒரு நிலையில் இல்லை'இந்த மழைக்குள் யார் வந்து உணவு கேட்கப்போகிறார்கள்?, அப்படியே உணவுக்காகஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூடஅவருக்கு இந்த களி பிடிக்குமாஅவர்கள் இதனை சாப்பிடுவார்களாஎன்ற மனக்கவலை தொற்றிக்கொண்டதுஇதே மனநிலையுடன் தம்பதியர் சிறிது நேரம் காத்திருக்க தொடங்கினர்.
சுவை மிகுந்த களி
அப்போது ஒரு சிவ தொண்டர்சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார்பின்னர் அந்த அடியார்,சேந்தனாரிடம், 'ஐயாஉங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதாஎனக்கு மிகவும் பசியாக இருக்கிறது'என்று கேட்டார்இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார்அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம்களியை எடுத்து பரிமாறும்படி கூறினார்.
களியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார்'அருமையான சுவைஇதே போல் சுவையுடன்நான் எந்த உணவும் சாப்பிட்டதில்லைஇந்த களிஅமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருப்பதாகவே எனக்குதோன்றுகிறதுஎன்று கூறினார்இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும்அவரது மனைவிக்கும்ஆனந்தம் தாளவில்லைஅந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார்'நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும்பிடித்திருக்கிறதுஇன்னும் இருந்தால் கொடுங்கள்நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்என்றுகூறினார்.
மூலவர் திருமேனி மேல்...
'
சமைத்ததே கொஞ்சம்தான்நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வதுஎன்று சேந்தனார் எண்ணவில்லைஅடியாரின்ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த அனைத்து களியையும் எடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார்.கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை எடுத்து அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக் கிடந்தனர்தம்பதியர்.
மறுதினம் காலை வழக்கம் போல்தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகருக்குஅங்குகண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுஆம்நடராஜரின் வாயில் களி ஒட்டிக் கொண்டிருந்ததுகருவறையில்கொஞ்சம் சிதறியும் கிடந்தது'யார் கருவறைக்குள் புகுந்ததுகளியை யார் நடராஜரின் வாயில் வைத்ததுஎன்றுதெரியாமல் பதற்றம் அடைந்தார்இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்ததுபின்னர் இந்த பிரச்சினையை அரசரிடம்கொண்டு சென்றனர்.
அவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லைமாறாக ஆச்சரியம் ஏற்பட்டதுஏனெனில் முன்தினம்இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், 'நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விடஇன்று சேந்தனார்என்ற தொண்டன் கொடுத்த களிஅமிர்தம் போல் இருந்ததுஎன்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்ததுஅதுவரைஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போதுஅது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான்உடனடியாக சேந்தனார்யார் என்றும்அவரை தேடி கண்டுபிடிக்கும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான்.
ராஜாங்க பணியாளர்கள்சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர்அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர்திருவிழா நடைபெற்றதுவிழாவில் அரசரும்மக்களும் கலந்துகொண்டனர்சேந்தனாரும் அந்த விழாவில்கலந்துகொண்டிருந்தார் மக்களோடு மக்களாகஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரியாதுஅப்போதுமுன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து கொண்டது.
பல்லாண்டு பாடினார்
அனைவருக்கும் இது அபசகுனமாக தென்பட்டதுஆனால் இறைவன் நடத்தும் விளையாட்டு யாருக்கும் புரியாது.எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க இயலவில்லையானைகள் முட்டித் தள்ளியபோதும்தேரானது கடுகளவும் முன்னேறவில்லைஇதனால் அரசரும்மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அந்த நேரத்தில், 'சேந்தனாரேநீ பல்லாண்டு பாடுஎன்று ஒரு அசரீரி கேட்டதுஅது இறைவனின் ஒலி என்றுஅனைவரும் அறிந்து கொண்டனர்அந்த குரலைக் கேட்ட சேந்தனாரோ, 'இறைவாஅடியேன் என்ன பாடுவதுஎனக்குபதிகம் பாடத் தெரியாதே!என்ற பொருளில் தன்னை அறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார்மேலும், 'மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகலஎன்று தொடங்கி, 'பல்லாண்டு கூறுதுமேஎன்று பதிமூன்றுபாடல்களை பாடி முடித்தார்அந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன்மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தைவிடுவித்தார்தேர் நகரத் தொடங்கியதுவெகு சுலபமாக நகரத் தொடங்கியதுதேரை பஞ்சு மூட்டையை இழுத்துச்செல்வது போல் இழுத்துச் சென்றனர் பக்தர்கள்.
ஈசன் திருவிளையாடல்
அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன்சேந்தனாரிடம் நேராக சென்று, 'தங்கள் வீட்டில்விருந்துண்டது அந்த ஈசன்தான்என் கனவில் தோன்றிய இறைவன்நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாகஇருந்ததாக கூறினார்நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார்என்றுகூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனாரின்உள்ளம் பூரித்துப் போய் இருந்தது.
சேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் 'திருவாதிரைதிருநாள்ஆகும்ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லைநடராஜருக்குகளி நைவேத்தியம் படைக்கப்படுகிறது

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।
   
 
 
                 
 hari krishnamurthy K. HARIHARAN)"'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

follow me @twitter lokakshema_hari

No comments: